ரயிலா ஐயோ
------------------------
வெள்ளி இரவு, நானும் எனது உறவினரும் மதுரைக்கு கிளம்பினோம். நான் எழும்பூரில் இருந்து பாண்டிய விரைவு வண்டி(!!!) மூலமாக 9 .45 மணிக்கு கிளம்பினேன். சகோதரர் 9 மணிக்கு கே. பி. என். பேருந்தில் கிளம்பினார். மறுநாள் காலை 6 .45 மணிக்கு மதுரையில் இறங்கி சகோதரருக்கு தொலைபேசினேன். தூக்கத்தில் எடுத்த அவர், தான் 4 .45 மணிக்கு வீடு சென்று சேர்ந்ததாகவும் நல்ல உறக்கம் என்றும் கூறினார். இதுதான் இன்றைய நிலையாகிவிட்டது. நான்கு வழிச்சாலை பணிகள் நமது தனியார் பேருந்துகளுக்கு மிகவும் வசதி செய்து கொடுத்துவிட்டது. இப்போது ரயில் ஏறும்போது(குறிப்பாக சென்னையில் இருந்து) சற்று கடுப்பாகவே இருக்கிறது. முன்னரே டிக்கெட் போடும் வசதி, படுத்து செல்லும் வசதி(எனது முதுகு வலி காரணமாக), மற்றும் டிக்கெட் கட்டணம் இதுமட்டுமே இன்னும் ரயிலை நம்புவதற்கு காரணம். இதற்க்கு ஒரே தீர்வு, மதுரை சென்னை இரட்டை ரயில் பாதை தான். அதற்கெல்லாம் குறைந்தது 5 ஆண்டுகள் ஆகும்போலவே தெரிகிறது.
கலாச்சாரம்
--------------------
நாக்பூரில் நடைபெறும் இந்திய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பார்த்தேன். அங்கே நான் கண்ட காட்சி சற்று யோசிக்க வைத்தது. தென்னாப்பிரிக்க அணியில் உள்ள இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஹாசிம் ஆம்லா என்கிற வீரரின் மனைவி பர்தா அணிந்து அமர்ந்திருந்தார். தென்னாப்பிரிக்க போன்ற கலாச்சாரம் கொண்ட நாட்டில் கூட ஒரு இஸ்லாமிய பெண் இப்படி தனது மதத்தின் கட்டமைப்பை கடைபிடிக்கும்போது, நமது பெண்கள் கலாசார முன்னேற்றம் என்று மதுரையிலும், திருச்சியிலும் ஜீன்ஸ் அணிந்து அலைகிறார்களே. என்ன கொடுமை சார் இது.பெண்கள் புடவை கட்டி வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்று கூறவில்லை. சுடிதார் என்ற ஒரு அருமையான ஆடை இருக்கிறது. அதனை அணியலாம். அதிலும் இப்போதைய பெண்கள், மிகவும் லேசான துணிகளில் ஆடை அணியும்பொழுது கஷ்டமாகத்தான் இருக்கிறது. என்னுடைய மனைவியோ, சகோதரியோ அப்படி ஆடை அணிந்தால் நான் தடுக்க முற்படுவேன். அதுபோல் அவர்களது பெற்றோர் /சகோதரர் கேட்க மாட்டார்களா என்பது எனது ஆதங்கம் மட்டுமல்ல, எனது அலுவலக சகாக்கள் அனைவருமே இதே கருத்தில் தான் இருக்கிறார்கள்.
பாராட்டு விழா
-------------------------
தமிழ் திரையுலகம் சார்பில், முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் சில புகைப்படங்கள் பார்த்தேன். எப்போது இந்த விழாவை கலைஞர் தொலைகாட்சியில் பார்ப்பது என்று ஏக்கம். ஆம் அஜித், சூர்யா மற்றும் விஜய் மூவரும் ஒரே மேடையில். நயன்தாரா பிரபு தேவா நடனம். கமல் நாடகம் இன்னும் பலபல கலை நிகழ்ச்சிகள். இதற்கு நடுவில் சற்று அரசியல் சலசலப்பு வேறு.நிகழ்ச்சியை வாரநாட்களில் போடமால் வார இறுதிநாட்களில் போட்டால் நன்றாக இருக்கும்.




ரோல் மாடல் தேவநாதன்
-------------------------------------------
காஞ்சி காம (!!!) குருக்கள் தேவனதனுக்கு சரியாக படம் எடுக்க தெரியவில்லை. அவரை விட நான் நன்றாக எடுக்கிறேன் என்று ஒரு தொழில்நுட்பக்கல்லூரி மாணவன், உடன் படிக்கும்மாணவியோடு நடத்திய காம விளையாட்டை, ஆதவன் திரைப்பட பாணியில் bubble gum வைத்து செல் போனை ஒட்டி வைத்து படம் பிடித்து வினயோகிதிருக்கிருக்கிறான். யார் யாரை எதற்காக ரோல் மாடலாக எடுப்பது என்பது மாணவர்களுக்கு புரியவில்லை போலும். (இந்த செய்தி சனி அன்று வெளியான ஜூனியர் விகடனில் வந்தது).
ஒட்டுமொத்தமாக ஒரு இரண்டரை மணி நேரத்துக்கு இடைவிடாமல் "லொள்ளு சபா" நிகழ்ச்சியை பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படிதான் இந்த படமும். ஆனால் அந்த நிகழ்ச்சியில் வாரம் ஒரு படமாக எடுத்து உரித்து தொங்கவிடுவார்கள். இந்த படத்தில் சீனுக்கு ஒரு ஹீரோவாக எடுத்து தொங்க விடுகிறார்கள். இந்த படத்தில் நான் ரசித்தவை
சின்ன வீடு என்று நான் படத்தின் தலைப்பு வைக்கும்பொழுது, பல எதிர்மறை விமர்சனங்கள் வந்தது. ஆனால் நான் தைரியமாக வைத்தேன். "நம்ம ஊர்ல நடக்காததா இது" என்று அவர்களுக்கு பதில் கூறினேன். 








